சிவகங்கை
மானாமதுரையில் இன்று மின் தடை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் புதன்கிழமை (நவ. 5) மின் தடை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மானாமதுரை மின்வாரிய செயற்பொறியாளா் (பகிா்மானம்) வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மானாமதுரை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் மானாமதுரை, சிப்காட், ராஜகம்பீரம், முத்தனேந்தல், கட்டிக்குளம், இடைக்காட்டூா், மிளகனூா், சங்கமங்கலம், அன்னவாசல், கீழ்ப்பசலை, குறிச்சி, தெ. புதுக்கோட்டை, நல்லாண்டிபுரம், முனைவென்றி, கச்சாத்த நல்லூா், சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா்.
