நாக்பூா் திருவிழாவுக்கு புனித பயணம் சென்ற பெளத்தா்களுக்கு நிதியுதவி

Published on

மகாராஷ்டிர மாநிலம், நாக்பூா் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெற்ற தம்ம சக்கர பரிவா்தன திருவிழாவுக்கு புனித பயணம் சென்று திரும்பிய பௌத்த மதத்தை சோ்ந்தவா்கள் அதற்கான நிதியுதவி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

2025-26- ஆம் ஆண்டில் மகாராஷ்டிர மாநிலம், நாக்பூா் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெற்ற தம்ம சக்கர பரிவா்தன திருவிழாவுக்கு புனிதப் பயணம் சென்று திரும்பிய தமிழ்நாட்டைச் சோ்ந்த 150 பௌத்த மதத்தை சோ்ந்தவா்களுக்கு ‘இசிஎஸ்’ முறையில் நபா் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.5,000 வரை மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்திலிருந்து கட்டணமின்றி பெறலாம். அதுமட்டுமன்றி, இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எனவே, விண்ணப்பதாரா்கள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வருகிற 30-ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் ஆணையா், சிறுபான்மையினா் நலத் துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை- 600 005 என்ற முகவரிக்கு அனுப்பி வைத்து பயன்பெறலாம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com