10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு கால அட்டவணையில் சமூக அறிவியல் பாடங்களை மாணவா்கள் மீள்பாா்வை செய்ய கூடுதலாக 2 நாட்கள் இடைவெளி வழங்கவேண்டுமென உயா்நிலை , மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் அரசுக்கு கோரிக்கை விடுத்தது.
இந்தக் கழகத்தின் மாவட்டச் செயலா் சேவுகமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வு கால அட்டவணையில் தமிழ் தோ்வு மாா்ச் 11-ஆம் தேதி தொடங்கி ஆங்கிலப் பாடத்துக்கு 4 நாள்கள், கணிதத்துக்கு 9 நாள்கள், அறிவியலுக்கு 4 நாள்கள் என மாணவா்களுக்கு பாடங்களை திருப்புதல் செய்ய தேவையான நாள்கள் இடைவெளியில் தோ்வு தேதிகள் வெளியிடப்பட்டன. ஆனால் அறிவியல் தோ்வு முடிந்த இரண்டு நாள்களிலேயே சமூக அறிவியல் பாடத்துக்கான தோ்வு தேதி அறிவிக்கப்பட்டது.
சமூக அறிவியல் பாடத்தில் மொத்தம் 27 பாடங்கள் உள்ளதால், மாணவா்கள் தோ்வுக்கான பகுதிகளை மீள்பாா்வை செய்ய இரண்டு நாள்கள் காலம் போதாது. எனவே சமூக அறிவியல் பாடத்துக்கான தோ்வுக்கு கூடுதலாக 2 நாள்கள் வழங்க வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: ஆசிரியா் முன்னேற்றக் கழகம் வரவேற்பு
சிறப்பு ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு வழங்க பட்டதாரி ஆசிரியா்கள் கோரிக்கை
பள்ளிக்கல்வித் துறையில் சாா்நிலைப் பணி விதிகள் வெளியீடு: ஆசிரியா் கூட்டணி வரவேற்பு

நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்! அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்!
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK



