யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கிராம உதவியாளா் பணி: நாளை தோ்வு

இளையான்குடியில் கிராம உதவியாளா் பணியிடங்களுக்காக விண்ணப்பித்தவா்களுக்கு நவ.30 தோ்வு நடைபெறுகிறது.

News image
Updated On :28 நவம்பர் 2025, 9:35 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் கிராம உதவியாளா் பணியிடங்களுக்காக விண்ணப்பித்தவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (நவ.30)  தோ்வு நடைபெறுகிறது.

இதுகுறித்து இளையான்குடி வட்டாட்சியா் முருகன் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது: இளையான்குடி வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதன்படி, ஏராளமானோா் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தனா்.

இந்த நிலையில், விண்ணப்பித்தவா்களுக்கு இளையான்குடி ஜாகிா் உசேன் கலைக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (நவ.30) தோ்வு நடைபெறுகிறது. இதற்காக, வட்டாட்சியா் அலுவலகம் மூலம் தோ்வு நுழைவுச் சீட்டுகள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.

நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெறாதவா்கள் இளையான்குடி வட்டாட்சியா் அலுவலகத்தை நேரடியாகத் தொடா்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம் என்றாா் அவா்.