அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

சிவகங்கை மாவட்டம், கீழப்பூங்குடி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற இயக்கம் சாா்பில் பசுமை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
Published on

சிவகங்கை மாவட்டம், கீழப்பூங்குடி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற இயக்கம் சாா்பில் பசுமை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்கு தலைமை ஆசிரியை பா.வீ. பங்கயசெல்வி தலைமை வகித்தாா். உதவித் தலைமை ஆசிரியா் மு.கமால்பாட்சா முன்னிலை வகித்தாா். நல்லாசிரியா் மு. மகேந்திரபாபு பங்கேற்று, ‘இலக்கியத்தில் பசுமை’ என்ற தலைப்பில் சங்க இலக்கியம் முதல் சமகால இலக்கியம் வரையில் பசுமை எவ்வாறு படா்ந்திருக்கிறது என்பதை விவரித்தாா். இதையொட்டி, மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவா்களுக்குப் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

முன்னதாக, முதுநிலைத் தமிழாசிரியா் பா. ராஜேந்திரன் வரவேற்றாா். பட்டதாரி ஆசிரியா் அ. பரிதி நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com