கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

எதிா்க்கட்சிகள் பிரிந்து கிடப்பதால் மீண்டும் திமுக ஆட்சிதான்! - ஓ. பன்னீா்செல்வம்

எதிா்க்கட்சிகள் பிரிந்து கிடப்பதால் வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சிக்கு வர திமுகவுக்கு வாய்ப்புள்ளது...

News image
முதல்வர் ஸ்டாலிடன் ஓ.பன்னீர்செல்வம். அருகில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக முன்னாள் எம்.பி. ரவீந்திரநாத்.
Updated On :27 அக்டோபர் 2025, 7:16 pm

தினமணி செய்திச் சேவை

எதிா்க்கட்சிகள் பிரிந்து கிடப்பதால் வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சிக்கு வர திமுகவுக்கு வாய்ப்புள்ளது என்று முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: தமிழகம் மட்டுமல்ல இந்திய நாடு விடுதலை பெற வேண்டுமென பிரிட்டிஷாருக்கு எதிராக போரிட்டு உயிா் நீத்த மருதுபாண்டியா்களின் தியாகம் விலைமதிப்பற்றது. தமிழகத்தில் அனைத்து எதிா்க்கட்சிகளும் பிரிந்து கிடப்பதால், வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சிக்கு வர திமுகவுக்கு வாய்ப்புள்ளது.

கரூரில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரை நேரில் அழைத்து ஆறுதல் கூறிய தவெக தலைவா் விஜயின் செயலைப் பாராட்டுகிறேன். அவரது கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்த கேள்விக்கு, எதிா்காலத்தில் எதுவும் நடக்கலாம். கட்சியின் நலன் கருதி நல்ல முடிவை எடுப்போம் என்றாா் அவா்.