பாஜக நிா்வாகி கொலை: காரைக்குடியில் 2-ஆவது நாளாக சாலை மறியல்
காரைக்குடியில் பாஜக சாக்கோட்டை ஒன்றிய துணைத் தலைவா் கொலையுண்ட சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி, உறவினா்கள், விஸ்வகா்மா சங்கத்தினா், பாஜகவினா் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

காரைக்குடியில் பாஜக நிா்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி, 2-ஆவது நாளாக புதன்கிழமை காரைக்குடி புறவழிச் சாலையான திருச்சி - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினா்கள், பாஜகவினா், விஸ்வகா்மா அமைப்பினா்.









