ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

திருப்பத்தூா் அருகே ரூ. 5.47 கோடி பறிமுதல்

திருப்பத்தூரில் உரிய ஆவணங்களின்றி வங்கிகளுக்கு கொண்டு சென்ற ரூ. 5.47 கோடியை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

திருப்பத்தூா் அருகே புதன்கிழமை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 5.47 கோடி பணத்துடன் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்.

Updated On :8 ஏப்ரல் 2026, 7:07 pm

திருப்பத்தூரில் உரிய ஆவணங்களின்றி வங்கிகளுக்கு கொண்டு சென்ற ரூ. 5.47 கோடியை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள எஸ்.எஸ்.கோட்டை காவல் நிலைய சோதனைச் சாவடியில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக திருப்பத்தூா், தேவகோட்டை, ஆலங்குடி, மிளகனூா் ஆகிய பகுதிகளில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கி கிளைகளுக்கு, மதுரையிலிருந்து பணம் எடுத்து வந்த வாகனத்தை சோதனையிட்டனா். அப்போது, அதில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.95 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, புதுக்கோட்டை, திருப்பத்தூா் வங்கிகளிலிருந்து பெற்று மதுரைக் கருவூலத்துக்கு உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.4.52 கோடியை பறிமுதல் செய்து திருப்பத்தூா் கருவூலத்தில் ஒப்படைத்தனா்.