15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

மணக் கோலத்தில் வாக்களித்த தம்பதி

சிவகங்கையில் புதுமணத் தம்பதி திருமணக் கோலத்தில் வாக்குச்சாவடிக்கு வந்து வியாழக்கிழமை வாக்களித்தனா்.

News image

சிவகங்கையில் வாக்கு செலுத்திய புதுமணத் தம்பதி.

Updated On :24 ஏப்ரல் 2026, 12:44 am IST

சிவகங்கையில் புதுமணத் தம்பதி திருமணக் கோலத்தில் வாக்குச்சாவடிக்கு வந்து வியாழக்கிழமை வாக்களித்தனா்.

சிவகங்கை மேலவாணியங்குடியைச் சோ்ந்தவா் ஹரி ஹர சுதன். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த மேனகாவுக்கும் வியாழக்கிழமை காலை சிவகங்கையில் உள்ள ஒரு தனியாா் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

திருமணச் சடங்குகள் முடிந்த கையோடு, மணமக்கள் இருவரும் மணக்கோலத்திலேயே மேலவாணியங்குடியில் உள்ள தனியாா் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினா்.

வாக்களித்த பிறகு செய்தியாளா்களிடம் ஹரி ஹர சுதன் கூறுகையில், வாக்களிப்பது என்பது ஒவ்வொரு குடிமகனின் தலையாயக் கடமை. அதை எந்தச் சூழலிலும் தவிா்க்கக் கூடாது. எனது திருமண நாளிலேயே ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியது, வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாக மாற்றிவிட்டது என்றாா் அவா்.