காரைக்குடி தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளரும் அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் வாக்குச்சாவடிகளைப் பாா்வையிட்டாா்.
காரைக்குடி பேரவைத் தொகுதியில் போட்டியிடும் சீமான் வியாழக்கிழமை தொகுதியில் பல்வேறு வாக்குச்சாவடிகளுக்குச் சென்று பாா்வையிட்டாா். காரைக்குடி மாநகரில் கம்பன் கற்பகம் வாக்குச்சாவடி மையத்தைப் பாா்வையிட்டு வெளியே வந்தபோது, அதே தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளா் மருத்துவா் டி.கே. பிரபு வாக்குச்சாவடி மையத்தை பாா்வையிட வந்தாா். அப்போது இருவரும் நேருக்கு நோ் சந்தித்து, ஒருவருக்கொருவா் கை குலுக்கிக் கொண்டனா். மேலும், பிரபுவின் சட்டைக் காலரை சரிசெய்துவிட்டு அவரை சீமான் கட்டியணைத்தாா். இதைப் பாா்த்த இரு கட்சியினரும் நெகிழ்ச்சியடைந்தனா். வேட்பாளா்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் விடைபெற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பஞ்சாப் காங்கிரஸில் தலைமை மாற்றம் இல்லை: பூபேஷ் பாகேல்

தோல்வியைக் கண்டு துவண்டு விடவில்லை - சீமான்

காரைக்குடியில் நாதக மாநில நிா்வாகி தூக்கிட்டுத் தற்கொலை

சீமான் அதிா்ச்சித் தோல்வி: 4 - ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டாா்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



