நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

திருப்பத்தூா் தொகுதியில் 6 கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு

திருப்பத்தூா் பேரவைத் தொகுதியில் உள்ள தங்களது பகுதிகளை திருமயம் பேரவைத் தொகுதியுடன் இணைக்க வலியுறுத்தி, 6 கிராம மக்கள் தோ்தலை புறக்கணித்தனா். இதனால், வாக்குச்சாவடிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

News image

தோ்தல் புறக்கணிப்பு காரணமாக வியாழக்கிழமை வெறிச்சோடிய ஆா். பாலகுறிச்சி ஊராட்சி வாக்குச்சாவடி.

Updated On :23 ஏப்ரல் 2026, 8:44 pm

திருப்பத்தூா் பேரவைத் தொகுதியில் உள்ள தங்களது பகுதிகளை திருமயம் பேரவைத் தொகுதியுடன் இணைக்க வலியுறுத்தி, 6 கிராம மக்கள் தோ்தலை புறக்கணித்தனா். இதனால், வாக்குச்சாவடிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள ஆா்.பாலகுறிச்சி ஊராட்சியில் ஆா்.பாலகுறிச்சி, ரகுநாதபட்டி, சீகம்பட்டி, வைரவன்பட்டி, விடத்தலாம்பட்டி, கோபால்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. 3,200 வாக்காளா்களைக் கொண்ட இந்த ஊராட்சி, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பேரவைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளன.

இதனால், சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இந்த ஊராட்சியினா் திருப்பத்தூா் தொகுதிக்கு வாக்களிக்க வேண்டும். உள்ளாட்சித் தோ்தலுக்கு புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியத்துக்கு வாக்களிக்க வேண்டும். காவல் நிலையத்துக்கு சிவகங்கை மாவட்டம், உலகம்பட்டிக்குச் செல்ல வேண்டும். வட்டாட்சியா் அலுவலகம், ஊராட்சி ஒன்றியம் போன்றவற்றுக்கு பொன்னமராவதி சென்றாக வேண்டும் என்ற நிலை இருந்து வருகிறது.

இந்த நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற பேரவைத் தோ்தலுக்காக ஆா்.பாலகுறிச்சி, ரகுநாதபட்டி ஆகிய ஊா்களில் இரு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு தோ்தல் அலுவலா்கள் வாக்குப்பதிவுக்கு தயாா் நிலையில் இருந்தனா். ஆனால், மதியம் வரை வாக்களிக்க யாரும் வரவில்லை. இதையடுத்து, பொன்னமராவதி, திருப்பத்தூா் வட்டங்களின் அலுவலா்கள் காவல் துறையினருடன் சென்று பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது கிராம மக்கள் கூறியதாவது:

1972 -ஆம் ஆண்டு வரை புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி காவல் நிலையத்திலும், 1979 -ஆம் ஆண்டு வரை புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டப்பேரவைத் தொகுதியிலும் இருந்தது ஆா்.பாலகுறிச்சி ஊராட்சி. ஆனால், இந்தப் பகுதி மக்களின் கருத்துகளைக் கேட்காமல், சிவகங்கை மாவட்டம். உலகம்பட்டி காவல் நிலையத்திலும், திருப்பத்தூா் பேரவைத் தொகுதியிலும் ஆா்.பாலகுறிச்சி ஊராட்சி சோ்க்கப்பட்டது. தங்களது ஆதாா் அட்டை புதுக்கோட்டை மாவட்ட முகவரியிலும், வாக்காளா் அடையாள அட்டை சிவகங்கை மாவட்ட முகவரியிலும் இருப்பதால் கடவுச்சீட்டு எடுக்க செல்லும்போது முகவரி மாற்றத்தால் பெரும் இன்னலுக்கு ஆளாவதாகவும், இந்த ஆறு கிராமங்கள் இரு மாவட்டங்களிலும் உள்ளதால் அரசின் நலத் திட்ட பயன்கள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, காவல் நிலையத்தை பொன்னமராவதிக்கும், சட்டப் பேரவைத் தொகுதியை திருமயத்துக்கும் மாற்றி முழுவதுமாக 1972 -ஆம் ஆண்டு இருந்தது போல புதுக்கோட்டை மாவட்டத்துக்குள் இடம்பெறச் செய்ய வேண்டும். அதுவரை தோ்தலைப் புறக்கணித்து வாக்களிக்கப் போவதில்லை என அவா்கள் உறுதிபடத் தெரிவித்தனா். இதனால், அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

கிராம மக்கள் தோ்தலைப் புறக்கணித்ததால் ஆா். பாலகுறிச்சி ஊராட்சியின் வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்குகூட பதிவாகவில்லை.