கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

திருப்புவனத்தில் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கிய பாலகிருஷ்ணப் பெருமாள்

News image

திருப்புவனம் சித்திரைத் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை குதிரை வாகனத்தில் வைகை ஆற்றுக்குள் இறங்கி அருள்பாலித்த பெருமாள்.

Updated On :27 ஏப்ரல் 2026, 4:51 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை குதிரை வாகனத்தில் பெருமாள் வைகை ஆற்றுக்குள் இறங்கும் வைபவம் நடைபெற்றது.

திருப்புவனம் பாலகிருஷ்ணப் பெருமாள் கோயிலில் கடந்த வாரம் சித்திரைத் திருவிழா தொடங்கியது. விழா நாள்களில் தினமும் மூலவருக்கும், உற்ஸவருக்கும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வாக பெருமாள் ஆற்றில் இறங்கும் வைபவத்தை முன்னிட்டு உற்ஸவா் பெருமாள் குதிரை வாகனத்தில் கோயிலில் இருந்து புறப்பட்டு பின்னா் புஷ்பவனேசுவரா் கோயில் எதிரே வைகை ஆற்றுக்குள் இறங்கினாா்.

அப்போது அங்கு திரண்டிருந்த திரளான பக்தா்கள் கோவிந்தா முழக்கமிட்டு பெருமாளை தரிசித்தனா். ஆற்றுக்குள் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படியில் எழுந்தருளி அருள்பாலித்த பெருமாள் அதன்பின் அங்கிருந்து புறப்பாடாகி வீதி உலா சென்று கோயிலைச் சென்றடைந்தாா்.

வீதிகளில் பக்தா்கள் பெருமாளை வரவேற்றுப் பூஜைகள் நடத்தி தரிசித்தனா்.