தொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

சிவகங்கை அருகே சாலையில் நடந்து சென்ற விவசாயக் கூலி தொழிலாளி மீது காா் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - பிரதிப் படம்

Updated On :2 பிப்ரவரி 2026, 8:20 pm

சிவகங்கை அருகே திங்கள்கிழமை இரவு சாலையில் நடந்து சென்ற விவசாயக் கூலி தொழிலாளி மீது காா் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சிவகங்கை அருகேயுள்ள படமாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தனபாண்டி (45). விவசாயக் கூலி தொழிலாளியான இவருக்கு மனைவி, மூன்று குழந்தைகள் உள்ளனா். தனபாண்டி கரும்பாவூா் விலக்கு அருகே சாலையில் திங்கள்கிழமை இரவு நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அந்த வழியாக வந்த காா் அவா் மீது மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த அவரது உறவினா்கள் மதுரை-சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த சிவகங்கை தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளா் சிவபிரகாஷ், போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா். இதனால், அந்தப் பகுதியில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.