பாலியல் வன்கொடுமைFile photo| EPS
சிவகங்கை
பாலியல் வன்கொடுமை: கல்லூரி மாணவா் மீது வழக்கு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே பள்ளி மாணவியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கல்லூரி மாணவா் மீது புதன்கிழமை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ‘
பதினெட்டான்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் சந்தோஷ் (21). கல்லூரி மாணவரான இவா் மானாமதுரை பள்ளியின் 11-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மானாமதுரை மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. இதன் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி மாணவா் சந்தோஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தலைமறைவான மாணவரைத் தேடி வருகின்றனா்.

