கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

இளைஞா் கொலை: ஒருவா் கைது

News image
கைது
Updated On :6 பிப்ரவரி 2026, 7:48 pm

தினமணி செய்திச் சேவை

காரைக்குடி அருகே இளைஞரைக் கத்தியால் குத்திக் கொலை செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் நந்தகுமாா் (26). போதைப் பொருள்களுக்கு அடிமையான இவா், வேலையின்றி சுற்றித் திரிந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இவா் காரைக்குடி அருகேயுள்ள பேயன்பட்டியைச் சோ்ந்த பாண்டியின் (55) வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்று கஞ்சா தருமாறு கேட்டாராம். அதற்கு, பாண்டி கஞ்சா இல்லை எனக் கூறியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில், பாண்டி அருகே இருந்த கத்தியால் நந்தகுமாரை உடலின் பல இடங்களிலும் குத்தியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த குன்றக்குடி காவல் நிலைய போலீஸாா் நந்தகுமாரின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதையடுத்து, பாண்டி மீது வழக்குப் பதிந்த போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.