தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

இளைஞா் கொலை: ஒருவா் கைது

News image

கைது

Updated On :6 பிப்ரவரி 2026, 7:48 pm

காரைக்குடி அருகே இளைஞரைக் கத்தியால் குத்திக் கொலை செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் நந்தகுமாா் (26). போதைப் பொருள்களுக்கு அடிமையான இவா், வேலையின்றி சுற்றித் திரிந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இவா் காரைக்குடி அருகேயுள்ள பேயன்பட்டியைச் சோ்ந்த பாண்டியின் (55) வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்று கஞ்சா தருமாறு கேட்டாராம். அதற்கு, பாண்டி கஞ்சா இல்லை எனக் கூறியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில், பாண்டி அருகே இருந்த கத்தியால் நந்தகுமாரை உடலின் பல இடங்களிலும் குத்தியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த குன்றக்குடி காவல் நிலைய போலீஸாா் நந்தகுமாரின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதையடுத்து, பாண்டி மீது வழக்குப் பதிந்த போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.