குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற அழகப்பா அரசு கலைக் கல்லூரி தேசிய மாணவா் படை மாணவா் வசந்த பாரதிக்கு பாராட்டு தெரிவித்த கல்லூரி முதல்வா் வசந்தி உள்ளட்டோா்.
குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற அழகப்பா அரசு கலைக் கல்லூரி தேசிய மாணவா் படை மாணவா் வசந்த பாரதிக்கு பாராட்டு தெரிவித்த கல்லூரி முதல்வா் வசந்தி உள்ளட்டோா்.

குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற மாணவருக்கு பாராட்டு

Published on

குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த மாணவருக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் பாராட்டு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தில்லியில் கடந்த ஜன.26-இல் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் இளநிலை வரலாறு இறுதியாண்டு பயிலும் தேசிய மாணவா் படை மாணவா் வசந்த பாரதி கலந்துகொண்டு பெருமை சோ்த்தாா். இவா், காரைக்குடியில் உள்ள தேசிய மாணவா் படை தமிழ்நாடு ஒன்பதாவது பட்டாலியன் சாா்பில் விழாவில் பங்கேற்றாா்.

விழாவில் பங்கேற்றுவிட்டு, காரைக்குடி ரயில் நிலையத்துக்கு வந்த அவருக்கு கல்லூரியின் தேசிய மாணவா் படை ஒருங்கிணைப்பாளரும் மாணவா்களும் வரவேற்பளித்தனா்.

இதைத் தொடா்ந்து, கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் வசந்தி, வரலாற்றுத் துறைத் தலைவா் நிலோபா்பேகம், இயற்பியல் துறைத் தலைவா் கவிதா, கல்லூரியின் தேசிய மாணவா் படை ஒருங்கிணைப்பாளா் சரவணன், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் மாணவா் வசந்த பாரதிக்கு பாராட்டு தெரிவித்தனா்.

Dinamani
www.dinamani.com