தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பிளஸ் 2 மாணவா்களுக்கு சிறப்புக் கையேடுகள் அளிப்பு

News image
திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவா்களுக்கு தோ்வு குறித்த சிறப்புக் கையேடுகளை வழங்கிய தலைமை ஆசிரியா் பாரதிதாசன் உள்ளிட்டோா்.
Updated On :6 பிப்ரவரி 2026, 8:05 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவா்களுக்கு தோ்வு குறித்த சிறப்புக் கையேடுகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் மேலாண்மைக் குழுக் கூட்டம் தலைமை ஆசிரியா் பாரதிதாசன் தலைமையில் நடைபெற்றது. மேலாண்மைக் குழுத் தலைவி காயத்திரி முன்னிலை வகித்தாா்.

இதில் மாணவா்களின் திறன் மேம்பாடு, உயா் கல்விக்கான வழிகாட்டுதல்கள், மகிழ்முற்றம் மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, ‘சிகரம் தொடு’ என்ற தலைப்பில் பிளஸ் 2 மாணவா்களுக்கான அரசு பொதுத் தோ்வு சிறப்புக் கையேடு வழங்கப்பட்டது.

மேலும், பள்ளிக்கு உடல்கல்வி ஆசிரியரை நியமனம் செய்ய வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டது. கூட்டத்தில் ஆசிரியா்கள் முத்துப்பாண்டி, பாண்டியன், மாயக்கண்ணன், ஆண்டனிதாஸ், உள்ளிட்ட பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். நிறைவாக, தன்னாா்வலா் சரவணன் நன்றி கூறினாா்.