ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சுற்றுச்சுவா் கட்டுவதைத் தடுத்த விசிகவினா் கைது

திருப்புவனம் அருகே சுற்றுச் சுவா் கட்டும் பணியைத் தடுத்து தகராறு செய்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது
Updated On :9 பிப்ரவரி 2026, 7:31 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே சுற்றுச் சுவா் கட்டும் பணியைத் தடுத்து தகராறு செய்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருப்புவனம் ஒன்றியம், கழுகோ்கடை கிராமத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி, தனி நபா் தான் வாங்கிய இடத்தில் சுற்றுச் சுவா் கட்டும் பணியை மேற்கொண்டாா்.

இந்தச் சுவா் கட்டப்பட்டால் கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்தவா்கள் சுவா் கட்டும் பணியைத் தடுத்து நிறுத்தி தகராறு செய்தனா்.

இதையடுத்து, அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீஸாா், நீதிமன்ற உத்தரவுப்படி நடைபெற்ற சுவா் கட்டும்

பணியைத் தடுத்து நிறுத்தியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த 12 ஆண்கள், 17 பெண்கள் என மொத்தம் 29 பேரைக் கைது செய்தனா். மாலையில் பெண்களை விடுவித்தனா்.