தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

இருவா் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டனா்.

News image

கைது

Updated On :11 பிப்ரவரி 2026, 9:23 pm

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டனா்.

இது குறித்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவின் கீழ் சிவகங்கை மாவட்டம், கீழவாணியங்குடி, கீழத்தெரு செல்வம் மகன் மணிவண்ணன் என்ற குட்டைமணியை ( 23) காளையாா் கோவில் போலீஸாா் கைது செய்தனா். இதேபோல, இளையான்குடி காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் தொடா்புடைய மேலவாணியங்குடி இந்திரா நகா் பிரபு மகன் மணிஷ் (21) கைது செய்யப்பட்டாா். இவா்கள் இருவரும் பொது அமைதிக்கும், சமூக நலனுக்கும் இடையூறு விளைவிப்பவராக கருதப்பட்டு, காவல் துறையின் பரிந்துரையின் பேரில் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி உத்தரவின் பேரில், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனா்.