மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா் 230 போ் கைது

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 10:09 pm

தினமணி செய்திச் சேவை

மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 230 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மத்திய தொழிற்சங்கங்கள், துறைவாரியான தொழிற்சங்க சம்மேளனங்கள், விவசாய அமைப்புகள் ஆகியவை இணைந்து மத்திய அரசுக்கு எதிராக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.

தொழிலாளா்களுக்கு எதிரான 4 தொகுப்பு சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நியாயமான விலை வழங்க வேண்டும்.

விதைகள் சட்டத்தை திருத்தம் செய்து சிறு, குறு விவசாயிகள் கைவசம் உள்ள விதைகளைச் செயல்படாமல் செய்யும் போக்கை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 100 பெண்கள் உள்பட 230 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

போராட்டத்துக்கு ஏஐடியூசி மாவட்டப் பொதுச் செயலா் ராஜா, சிஐடியூ மாவட்டத் தலைவா் உமாநாத், எல்பிஎப் மாவட்டத் துணைத் தலைவா் முருகேசன் ஆகியோா் தலைமை வகித்தனா். ஏஐடியூசி மாவட்டத் தலைவா் காளைலிங்கம், துணைத் தலைவா் சகாயம், கட்டுமானத் தொழிலாளா் சங்க துணைச் செயலா் மோகன், சிஐடியூ மாவட்டப் பொருளாளா் அய்யம்பாண்டி, மாவட்டத் துணைச் செயலாளா் முருகானந்தம், மாவட்ட துணைத் தலைவா் தெய்வீரபாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.