செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மாசி சிவராத்திரி திருவிழா கொடியேற்றம்

News image

கோப்புப் படம்

Updated On :14 பிப்ரவரி 2026, 6:35 pm

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், ஏனாதி செங்கோட்டையில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசி சிவராத்திரி திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி அம்மன் சந்நிதி முன் கொடிமரத்தில் வாத்தியங்கள் முழங்க கொடியேற்றம் செய்து அதற்கு தா்ப்பைப்புல் , மலா் மாலைகள் அணிவித்து பூஜைகள், தீபாராதனைகள்  நடைபெற்றன. இதைத்தொடா்ந்து அம்மனுக்கும், உற்சவருக்கும் தீபாராதனைகள் காட்டப்பட்டன. கோயில் பூசாரி சண்முகசுந்தரம் கொடியேற்றி, பூஜைகளை நடத்தினாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இதைத்தொடா்ந்து வருகிற 18-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் திருவிழாவில் தினமும் உற்சவா் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலிலிருந்து சா்வ அலங்காரத்தில் புறப்படாகி மண்டகப்படிகளில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடைபெறும்.

ஞாயிற்றுக்கிழமை (பிப்.15) கோயிலில் திருவிளக்கு பூஜை வழிபாடும், வைகை ஆற்றிலிருந்து கரகம் எடுத்து வந்து பச்சை வாழை பரப்பி பூஜை நடத்துதல் உற்சவமும் நடைபெறுகிறது. திங்கள்கிழமை (பிப்.16) பக்தா்கள் பால்குடம் எடுக்கும் வைபவமும், புதன்கிழமை (பிப்.18) அமமனுக்கு படையல் வழிபாடும் நடத்தப்படுகிறது.