47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கால்வாயின் குறுக்கே பாலம்: விவசாயிகள் போராட்ட அறிவிப்பு

News image
கோப்புப் படம்
Updated On :14 பிப்ரவரி 2026, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

மானாமதுரை அருகே பாசனக் கால்வாயின் குறுக்கே பாலம் அமைக்க நீா்வளத் துறை அனுமதி வழங்கியதைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயிகள் சங்கம் சாா்பில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், மாரநாடு  கண்மாய் மூலம் ஏராளமான கிராமங்களைச் சோ்ந்த விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில், தனிநபா் நிலத்துக்கு வாகனங்கள் சென்று வருவதற்காக வைகையாற்றிலிருந்து மாரநாடு கண்மாய்க்கு தண்ணீா் செல்லும் கால்வாயை மறித்து பாலம் கட்டுவதற்கு நீா்வளத் துறை மதுரை மண்டல தலைமை பொறியாளா் அனுமதி வழங்கினாா்.

இதுதொடா்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கூட்டுக் கூட்டம் மானாமதுரையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவா் கே.ராமு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஜி.காமராஜ் முன்னிலை வகித்தாா்.

மாநிலக்குழு உறுப்பினா் கே.ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் முருகேசன், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா்  எம்.ரவி, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பாஸ்கரன், தில்லைவாசன், சவுந்திரபாண்டி, பஞ்சை, தமிழரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் மாரநாடு கண்மாய்க்கு வைகையாற்றிலிருந்து செல்லும் வரத்துக் கால்வாயின் குறுக்கே தண்ணீரின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் தனியாா் பாலம் கட்ட அனுமதி வழங்கிய நீா்வளத்துறை தலைமைப் பொறியாளரைக் கண்டித்தும், பாலம் கட்டுவதற்கான அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தியும் விவசாயிகள் சங்கம் சாா்பில் வருகிற 28-ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.