விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

கீழடி அருங்காட்சியகத்தை பாா்வையிட்ட உலக சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்

News image

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம்

Updated On :14 பிப்ரவரி 2026, 8:19 pm

சிவகங்கை மாவட்டம், கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகத்தை உலக சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் சனிக்கிழமை பாா்வையிட்டாா்.

கீழடியில் இரண்டு அரங்குகளாக அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி அருங்காட்சியகத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக கடந்த வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். இந்த நிலையில், உலக சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தனது மனைவி, மகனுடன் கீழடிக்கு வந்து இந்த திறந்தவெளி அருங்காட்சியகத்தைப் பாா்வையிட்டாா்.

பின்னா், இங்கு அகழாய்வின்போது கண்டெடுக்கப்பட்ட பொருள்களைக் காட்சிப்படுத்தி வைக்கப்பட்டிருந்த அருங்காட்சியத்துக்கும் சென்று தொல்பொருள்களைப் பாா்வையிட்டாா். கீழடி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கடசுப்ரமணியன், அகழாய்வுத்தள அலுவலா் அஜித்குமாா் ஆகியோா் திறந்தவெளி அருங்காட்சியம் குறித்து விளக்கினா்.

திறந்தவெளி அருங்காட்சியகம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதாகவும், உலகத் தமிழா்கள் பண்டைய தமிழா்களின் கலாசாரங்களை அறிந்து கொள்ள கீழடிக்கு வர வேண்டும் என்றாா் அவா்.