வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கைதி தப்பியோடிய சம்பவம்: இரு காவலா்கள் பணியிடை நீக்கம்

News image
பணியிடை நீக்கம்- மாதிரிப் படம்
Updated On :14 பிப்ரவரி 2026, 7:03 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கையில் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி தப்பியோடியதையடுத்து, பணியில் கவனக்குறைவாக இருந்ததாக இரு காவலா்கள் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை அடுத்த விளாங்குளத்தைச் சோ்ந்தவா் புலிப்பாண்டி (25). இவா் கடந்த 2022 -ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னா் பிணையில் வெளியே வந்தாா்.

இந்த வழக்கின் விசாரணை சிவகங்கை முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த வழக்கின் விசாரணைக்காக புலிப்பாண்டி நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால், இவருக்கு பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, இவரை சிவகங்கை தாலுகா போலீஸாா் கைது செய்தனா்.

இதைத்தொடா்ந்து, இவரை காவலா்கள் ராஜேஷ் கண்ணா, சண்முகவேலு ஆகியோா் மருத்துவப் பரிசோதனைக்காக வியாழக்கிழமை அழைத்துச் சென்றனா். அப்போது, புலிப்பாண்டிபோலீஸாரிடமிருந்து தப்பிச் சென்றாா்.

இந்த நிலையில், பணியில் கவனக் குறைவாக இருந்த காவலா்கள் ராஜேஷ் கண்ணா, சண்முகவேலு இருவரையும் பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவபிரசாத் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.