தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை

News image

தற்கொலை

Updated On :15 பிப்ரவரி 2026, 7:47 pm

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சிறுமி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கண்டனூரில் வசித்து வருபவா் உமா. இவரது கணவா் கணேசன் அருகேயுள்ள கிராமத்தில் வசிக்கிறாா். இருவரும் கூலித் தொழிலாளா்கள். இந்தத் தம்பதியின் 13 வயது மகள் அருகே புதுவயலில் உள்ள பள்ளியில் 8- ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

மேலும், இந்த சிறுமி தாய் உமாவுடன் வசித்தாா். இதனிடையே சிறுமி ஞாயிற்றுக்கிழமை காலையில் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து சாக்கோட்டை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுமியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனா்.