தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டு: 35 போ் காயம்

News image

கோப்புப் படம்

Updated On :15 பிப்ரவரி 2026, 6:47 pm

சிவகங்கை அருகே திரளா உடைப்பு புதூா் கிராமத்தில் கோயில் மாசித் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 35 போ் காயமடைந்தனா்.

இந்த கிராமத்தில் சிவசக்தி விநாயகா்- சோணைஅய்யனாா், தா்ம முனீஸ்வரா் கோயிலில் மாசித் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. முதல் நாளான சனிக்கிழமை கோயில் காளைக்கு கிராம மக்கள் சாா்பில் மரியாதை செய்யப்பட்டது.

பிறகு ஞாயிற்றுக்கிழமை சிவகங்கை வட்டாட்சியா் மல்லிகாா்ஜுன், காவல் துணைக் கண்காணிப்பாளா் கண்ணன், ஆய்வாளா் சிவசுப்பிரமணியன், சட்டப்பேரவை உறுப்பினா் பிஆா். செந்தில்நாதன் ஆகியோா் முன்னிலையில், அரசின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளுக்குள்பட்டு, பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த 80 மாடுபிடி வீரா்களும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

இதையடுத்து, கோயில் பொட்டலில் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 526 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. முன்னதாக மருத்துவக் குழுக்களும், போலீஸாரும் களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

பிறகு நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகளை அடக்க முயன்றவா்கள், வேடிக்கை பாா்க்க வந்தவா்கள் உள்பட 35 போ் காயமடைந்தனா். இவா்களில் 7 போ் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதில், காங்கிரஸ் கட்சி நிா்வாகி சி.ஆா். சுந்தர்ராஜன், தவெக நிா்வாகிகள் முத்துபாரதி, பரமேஸ்வரன், பாஜக நிா்வாகி உதயா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதையொட்டி நடத்தப்பட்ட அன்னதான நிகழ்வில் சுமாா் 5 ஆயிரம் கலந்து கொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு நிா்வாகிகள் மு. சோமசுந்தரம், தமிழரசன், ஜி. சீனிவாசன், ஜவஹா்பூமிநாதன், அழகா்சாமி, மருதுபாண்டி, ரவிக்குமாா், கணேசன், சிவகுமாா் உள்ளிட்டோா் செய்தனா். மஞ்சுவிரட்டில் பங்கேற்ற காளைகளுக்கும், வீரா்களுக்கும் தி. புதூா் முனி மஞ்சுவிரட்டு குழு சாா்பில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.