திருப்பத்தூா் தம்பிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் காளையை அடக்க முயன்ற காளையா்கள்.
திருப்பத்தூா் தம்பிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் காளையை அடக்க முயன்ற காளையா்கள்.

திருப்பத்தூரில் வடமாடு மஞ்சுவிரட்டு

Published on

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் தம்பிபட்டியில் கருப்பா் கோயில் திருவிழாவையொட்டி, வடமாடு மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டியில் பங்கேற்க புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 18 காளைகள் கொண்டுவரப்பட்டன.

இதில் ஒரு காளைகளை அடக்குவதற்கு 9 மாடுபிடி வீரா்கள் களமிறக்கப்பட்டனா். 20 நிமிஷங்களுக்குள் காளைகளை அடக்கினால், வீரா்கள் வெற்றி பெற்றதாகவும், இல்லையெனில், காளைகள் வெற்றி பெற்ாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 6 போ் காயமடைந்தனா். இவா்களுக்கு அந்தப் பகுதியில் முகாமிட்டிருந்த மருத்துவக் குழுவினா் முதலுதவி சிகிச்சை அளித்தனா்.

வெற்றி பெற்ற வீரா்கள், காளையின் உரிமையாளா்களுக்கு ரொக்கப் பரிசு, தென்னங்கன்று, வைக்கோல் கட்டு, அரிசி மூட்டை, சில்வா் பாத்திரம் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

Dinamani
www.dinamani.com