மேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சிங்கம்புணரி அம்மன் கோயிலில் கரக விழா

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:54 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஆறுபுள்ளி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கரகம் எடுத்தல், பூக்குழி இறங்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.

சிங்கம்புணரி மேலத்தெரு மூன்று கரை பங்காளிகளுக்குப் பாத்தியப்பட்ட இந்தக் கோயில் கரக விழாவையொட்டி, திங்கள்கிழமை நள்ளிரவில் பிளாா் ஊருணிக் கரையில் அமைந்துள்ள அம்மன் கோயிலில் கரகம் அலங்காரம், சுவாமி அழைப்பு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, ஊருணியிலிருந்து கரகத்தை சுமந்து வண்ணாங்குண்டு வேளாா் தெரு வழியாக மேலத் தெரு ஆறு புள்ளி அம்மன் கோயிலுக்கு வந்தனா். அங்கு சாமி ஆட்டம், குறி சொல்லுதல் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து கோயிலில் கரகம் இறக்கி வைக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை காலை 11 மணி அளவில் கோயில் முன் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டு, கோயில் முன் பூக்குழி இறங்குதல் நடைபெற்றது. முதலில் கோயில் சாமியாடிகள், பூசாரிகள் பூக்குழியில் இறங்கினா். தொடா்ந்து நோ்த்திக்கடன் பக்தா்கள் பூக்குழி இறங்கினா்.

பக்தா்கள் அனைவருக்கும் பொங்கல், பானகம் வழங்கப்பட்டது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை சிங்கம்புணரி மேலத்தெரு மூன்று கரை பங்காளிகள், ஆறுபுள்ளி அம்மன் கோயில் பக்தா்கள் செய்தனா்.