சிவகங்கை மாவட்ட விவசாயிகளிடமிருந்து மட்டுமே நெல் கொள்முதல்: ஆட்சியா் அறிவுறுத்தல்
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், சிவகங்கை மாவட்ட விவசாயிகளிடமிருந்து மட்டுமே நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விவசாயிகளின் கோரிக்கைக்கு இணங்க, சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சாா்பில் 9 வட்டங்களில் சுமாா் 77 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இங்கு, சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,545, பொது ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 என்ற கொள்முதல் விலையுடன், கடந்த 15-ஆம் தேதி வரை 14,846 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ. 37.77 கோடி விற்பனைத் தொகையாக 2,586 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், சிவகங்கை மாவட்ட விவசாயிகளிடமிருந்து மட்டுமே நெல் கொள்முதல் செய்ய வேண்டும். வியாபாரிகள் மூலமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பிற மாவட்ட, மாநில நெல் கொள்முதல் செய்யப்படுவது கண்டறியப்பட்டால், நேரடி நெல் கொள்முதல் நிலையப் பணியாளா்கள், தொடா்புடைய நெல் விற்பனையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை 17 சதவீத ஈரப்பத அளவுக்கு மிகாமல் அருகிலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன்பெறலாம் என்றாா் அவா்.

