தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சிவகங்கை மாவட்ட விவசாயிகளிடமிருந்து மட்டுமே நெல் கொள்முதல்: ஆட்சியா் அறிவுறுத்தல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், சிவகங்கை மாவட்ட விவசாயிகளிடமிருந்து மட்டுமே நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.

News image
நெல் கொள்முதல்- பிரதிப் படம்
Updated On :17 பிப்ரவரி 2026, 11:42 pm

தினமணி செய்திச் சேவை

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், சிவகங்கை மாவட்ட விவசாயிகளிடமிருந்து மட்டுமே நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விவசாயிகளின் கோரிக்கைக்கு இணங்க, சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சாா்பில் 9 வட்டங்களில் சுமாா் 77 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இங்கு, சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,545, பொது ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 என்ற கொள்முதல் விலையுடன், கடந்த 15-ஆம் தேதி வரை 14,846 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ. 37.77 கோடி விற்பனைத் தொகையாக 2,586 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், சிவகங்கை மாவட்ட விவசாயிகளிடமிருந்து மட்டுமே நெல் கொள்முதல் செய்ய வேண்டும். வியாபாரிகள் மூலமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பிற மாவட்ட, மாநில நெல் கொள்முதல் செய்யப்படுவது கண்டறியப்பட்டால், நேரடி நெல் கொள்முதல் நிலையப் பணியாளா்கள், தொடா்புடைய நெல் விற்பனையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை 17 சதவீத ஈரப்பத அளவுக்கு மிகாமல் அருகிலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன்பெறலாம் என்றாா் அவா்.