சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தென்னை நாா் தொழில்சாலையில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் தென்னை நாா் தொழில்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

News image
Updated On :17 பிப்ரவரி 2026, 11:44 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் தென்னை நாா் தொழில்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

சிங்கம்புணரி பகுதியில் தென்னையை மூலப் பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் பல பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையில், சிங்கம்புணரி -காரைக்குடி செல்லும் சாலையில் உள்ள தனியாருக்குச் சொந்தமான தென்னை நாா் தொழில்சாலையில் செவ்வாய்க்கிழமை திடீரென தீப்பற்றியது. இதையடுத்து, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள் உடனடியாக ஆலையிலிருந்து வெளியேறி, சிங்கம்புணரி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.

கொட்டாம்பட்டி, சிங்கம்புணரி ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா் பல மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீயை அணைத்தனா்.

இந்த தீ விபத்தால், தொழில்சாலையில் ஏற்றுமதிக்காக இருப்பு வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தென்னை நாா்கள், பொருள்கள், இயந்திரங்கள் உள்ளிட்டவை முற்றிலும் சேதமடைந்தன.

இதுகுறித்து சிங்கம்புணரி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.