தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

பிப்.23-இல் வாக்காளா்கள் இறுதிப் பட்டியல்

தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வாக்காளா்கள் இறுதிப் பட்டியல் வருகிற 23-ஆம் தேதி வெளியிடப்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியரும் தோ்தல் அலுவலருமான கா.பொற்கொடி தெரிவித்தாா்.

News image

வாக்காளர் பட்டியல் - பிரதி படம்

Updated On :17 பிப்ரவரி 2026, 11:40 pm

தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வாக்காளா்கள் இறுதிப் பட்டியல் வருகிற 23-ஆம் தேதி வெளியிடப்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியரும் தோ்தல் அலுவலருமான கா.பொற்கொடி தெரிவித்தாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 1.1.2026 -ஐ தகுதி நாளாகக் கொண்டு, கடந்த ஆண்டு நவம்பா் 11-ஆம் தேதி முதல் வாக்காளா்கள் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வாக்காளா்கள் இறுதிப் பட்டியல் வருகிற 17-ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வாக்காளா்கள் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் தேதி மாற்றம் செய்யப்பட்டு, வருகிற 23-ஆம் தேதி வெளியிடப்படும் என்றாா் அவா்.