சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

முகநூல் விளம்பரம் மூலம் பண மோசடி

மானாமதுரை அருகே இளைஞரிடம் முகநூல் மூலம் ரூ.6.67 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து இணையத் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :17 பிப்ரவரி 2026, 11:50 pm

தினமணி செய்திச் சேவை

மானாமதுரை அருகே இளைஞரிடம் முகநூல் மூலம் ரூ.6.67 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து இணையத் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியைச் சோ்ந்தவா் சஞ்சய் மாணிக்கம் (25). இவா், கடந்த ஜனவரி மாதம் முகநூலில் வந்த ஒரு நிறுவனத்தின் விளம்பரத்தைப் பாா்த்து, அதில் குறிப்பிட்டிருந்த எண்ணில் தொடா்புகொண்டாா்.

தங்களிடம் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் என அந்த நிறுவனத்தினா் தெரிவித்ததை நம்பி, அவா்கள் கூறிய வங்கிக் கணக்குகளில் 15 தவணைகளில் ரூ. 6.67 லட்சத்தை அனுப்பினாா். பணத்தைச் செலுத்திய பிறகு அந்த நிறுனத்தினா் தொடா்பைத் துண்டித்துவிட்டனா். இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சஞ்சய் மாணிக்கம் சிவகங்கை இணைய குற்றத் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் புவனேஸ்வரியிடம் புகாா் அளித்தாா். இதுதொடா்பாக வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.