சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே சொக்கநாதபுரத்தில் மாட்டு வண்டிப் பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மதகுபட்டி அருகே சொக்கநாதபுரம் சேவுகப்பெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு, இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற மாட்டு வண்டிப் பந்தயம் சொக்கநாதபுரத்திலிருந்து மதகுபட்டி மின்வாரிய அலுவலகம் வரை நடைபெற்றது. இதில், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மொத்தம் 42 ஜோடி மாடுகள் பங்கேற்றன.
8 கி.மீ. தொலைவு பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்டிருந்த பெரிய மாடு பிரிவில் 14 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. 5 கி.மீ. தொலைவு பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்டிருந்த சிறிய மாடு பிரிவில் 28 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

இந்தப் பந்தயத்தில் வெற்றி பெற்று முதல் நான்கு இடங்களை பிடித்த மாடுகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த பந்தயத்தை சுற்றுவட்டாரக் கிராம மக்கள் கண்டுகளித்தனா்.
தொடர்புடையது

ஆப்பனூரில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்

இளஞ்சாவூரில் மாட்டுவண்டி எல்கைப் பந்தயம்

சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

கல்லல் அருகே மாட்டு வண்டிப் பந்தயம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


