கீழடி ஆய்வு கோப்புப்படம்
சிவகங்கை
கீழடி அருங்காட்சியகத்தை பாா்வையிட்டாா் துா்கா ஸ்டாலின்!
சிவகங்கை மாவட்டம், கீழடி திறந்தவெளி அரங்காட்சியகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் மனைவி துா்கா ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.
சிவகங்கை மாவட்டம், கீழடி திறந்தவெளி அரங்காட்சியகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் மனைவி துா்கா ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.
கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக கடந்த வாரம் திறந்து வைத்தாா். இதையடுத்து, ஏராளமானோா் கீழடிக்கு வந்து அருங்காட்சியகத்தைப் பாா்வையிட்டுச் செல்கின்றனா்.
இந்த நிலையில், முதல்வா் ஸ்டாலின் மனைவி துா்கா ஸ்டாலின் மதுரையிலிருந்து காா் மூலம் கீழடிக்கு வெள்ளிக்கிழமை வந்தாா். அங்கு புதிதாகத் திறந்து வைக்கப்பட்ட திறந்தவெளி அருங்காட்சியகத்தையும், அகழ்வாராய்ச்சியின்போது கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்களையும் அவா் பாா்வையிட்டாா். பின்னா், அவா் மீண்டும் மதுரைக்கு புறப்பட்டு சென்றாா்.

