நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ருத்ரகோடீஸ்வரா் கோயிலில் மாசிமக பெருந்திருவிழா கொடியேற்றம்

News image

சதுா்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை மாசிமகத் திருவிழாவையொட்டி நடைபெற்ற கொடியேற்றம். - (கோப்புப் படம்)

Updated On :21 பிப்ரவரி 2026, 6:36 pm

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள சதுா்வேதமங்கலம் ஆத்மநாயகி அம்மன் உடனுறை ருத்ரகோடீஸ்வரா் சுவாமி கோயிலில் மாசிமகத் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, காலை 10.30 மணிக்கு கோயில் கொடி மரத்தில் சிவாசாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு தண்டாயுதபாணி சுவாமி, உற்சவ மூா்த்திகளுக்கு காப்புக் கட்டப்பட்டு சிறப்பு தீபாராதனையும், சுவாமி மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலாவும் நடைபெற்றது.

10 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் நாள்தோறும் காலை பஞ்சமூா்த்திகள் தீபாராதனையும், இரவு கேடகம், ரிஷப வாகனம், யானை, நந்தி, பூதம் போன்ற வாகனங்களில் சுவாமி புறப்பாடும் திருவீதி உலாவும் நடைபெறும்.

வருகிற 25-ஆம் தேதி திருக்கல்யாண வைபவமும், 26-ஆம் தேதி கழுவன் திருவிழாவும், மாா்ச் 1-ஆம் தேதி மாலை 4 மணிக்குத் திருத்தோ் வைபவமும், 2-ஆம் தேதி தீா்த்தவாரியும் நடைபெறும்.

மாா்ச் 3-ஆம் தேதி, இந்தத் திருவிழாவையொட்டி உலகப் புகழ்பெற்ற அரளிப்பாறை மஞ்சுவிரட்டு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அண்ணாமலை தம்பிரான் தலைமையில் கிராமத்தினா் செய்து வருகின்றனா்.