தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்கும்! - குடியரசு துணைத் தலைவா்!

News image
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்- கோப்புப் படம்
Updated On :22 பிப்ரவரி 2026, 8:10 pm

தினமணி செய்திச் சேவை

மத்திய, மாநில அரசுகள் எப்போதும் இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்கும் என குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் செளமிய நாராயணப் பெருமாள் கோயிலில் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா், சிவகங்கை அரண்மனையில் உள்ள ராணி வேலுநாச்சியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சிவகங்கை வீரம் விளைந்த மண்ணாகவும், மகத்தான சரித்திரத்துக்குச் சொந்தமான இடமாகவும் கருதப்படுகிறது. குறிப்பாக, இழந்த அரசைப் போா் புரிந்து மீண்டும் கைப்பற்றிய ஒரே மகாராணி வேலுநாச்சியாா் என்ற பெருமைக்குரிய மண் சிவகங்கை.

மத்திய, மாநில அரசுகள் எப்போதும் இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்கும். வயதானால் அனைவரும் காவி உடை அணிவாா்கள். இது அவா்களது விருப்பம் என்றாா் அவா்.

இதில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், சிவகங்கை தொகுதி பொறுப்பாளா் மேப்பல் சத்தியநாதன், மாவட்ட துணைத் தலைவா் இ. கந்தசாமி, மாநில பொதுச் செயலா் நாகேந்திரன், மாநிலச் செயலா் பாலமுருகன், மாநில ஓபிசி அணி செயலா் வடிவேல், முன்னாள் மாவட்டத் தலைவா் சொக்கலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, குடியரசு துணைத் தலைவருக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா்.

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவப்பிரசாத் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.