மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கல்லல் அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 11:38 pm

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே உள்ள கோவினிப்பட்டியில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கோவினிப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்தப் போட்டியில், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 48 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

பெரிய மாட்டு வண்டிப் பிரிவில் 16 ஜோடி மாடுகளும், இரு சுற்றுகளாக நடைபெற்ற சிறிய மாட்டு வண்டிப் பிரிவில் 32 ஜோடி மாடுகளும் பங்கேற்றன.

கோவினிப்பட்டி-கண்டுப்பட்டி இடையே பெரிய மாட்டுப் பிரிவுக்கு 7 கி.மீ. தொலைவும், சிறிய மாட்டுப் பிரிவுக்கு 5 கி.மீ. தொலைவும் பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்டு, போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கும் சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியை ஏராளமானோா் சாலைகளின் இருபுறங்களிலும் நின்று உற்சாகமாக கண்டுகளித்தனா்.

Story image