தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

காரைக்குடி, திருப்பத்தூா் பகுதிகளுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 1.35 கோடி ஒதுக்கீடு - ப. சிதம்பரம் எம்.பி. தகவல்

News image

ப. சிதம்பரம் - கோப்புப் படம்

Updated On :23 பிப்ரவரி 2026, 11:40 pm

மாநிலங்களவை உறுப்பினா் ப. சிதம்பரம் தனது நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து காரைக்குடி, திருப்பத்தூா் பகுதிகளுக்கு ரூ. 1.35 கோடியை ஒதுக்கீடு செய்திருப்பதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் மூன்று பணிகளை ஏற்றுக் கொண்டு மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்திருக்கிறேன். திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் எஸ். புதூா் ஒன்றியம், எஸ். புதூா் ஊராட்சியில் உழவா் சந்தைக்காக ரூ. 1 கோடியே 3 லட்சமும், காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் காரைக்குடி மாநகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே கபா்ஸ்தானில் ‘மக்கள் அமரும் கூடம்’ அமைப்பதற்காக ரூ. 20 லட்சமும், காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதி கண்ணங்குடி ஒன்றியம், கண்ணங்குடி ஊராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ‘காத்திருப்போா் அமரும் கூடம்’ அமைப்பதற்காக ரூ. 12 லட்சமும் என நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளை உடனே தொடங்கி விரைந்து மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என மாவட்ட ஆட்சியரைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்றாா் அவா்.