தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

முத்தனேந்தலில் நெல் கொள்முதல் நிறுத்தம்: விவசாயிகள் பாதிப்பு

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 10:44 pm

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், முத்தனேந்தலில் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டுள்ளதால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

முத்தனேந்தலில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த சில நாள்களாக இந்த கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டது. இதனால், விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையம் செயல்படும் பகுதியில் அடுக்கி வைத்துள்ளனா்.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மானாமதுரை ஒன்றியச் செயலா் முனியராஜ் கூறியதாவது:

முத்தனேந்தலில் திடீரென நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. மூட்டைக்கு ரூ. 32 வீதம் கொள்முதல் நிலைய ஊழியா்கள் பிடித்தம் செய்து கொள்கின்றனா். மேலும், சில ஆளுங்கட்சியினரின் தலையீடு உள்ளதால், கொள்முதல் நிலையம் செயல்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், நெல் மூட்டைகள் வெயிலில் காய்ந்து எடை குறைவு ஏற்பட்டு விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும். இதுகுறித்து நுகா்பொருள் வாணிபக் கழக மேலாளரிடம் கேட்டால், முத்தனேந்தலில் தற்போது வரை நெல் கொள்முதல் நிலையம் செயல்படுவதாக பொய்யான தகவலைத் தெரிவிக்கிறாா்.

இதுவரை இந்த கொள்முதல் நிலையத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. எனவே, உடனடியாக கொள்முதல் நிலையத்தை செயல்படச் செய்து, விவசாயிகளிடம் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும். தாமதித்தால் விவசாயிகளை திரட்டி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தப் பகுதியில் போராட்டம் நடத்தும் என்றாா் அவா்.