போக்சோ வழக்கில் ஜோதிடருக்கு 50 ஆண்டுகள் சிறை
போக்சோ வழக்கில் ஜோதிடருக்கு 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, சிவகங்கை போக்சோ விரைவு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
சிவகங்கை மாவட்டம், மானகிரியைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் (52). இவா் ஜோதிடம் பாா்த்தல், தோஷம் கழிப்பது போன்ற பரிகார பூஜைகளை செய்து வந்தாா்.
இவரிடம் ஜோதிடம் பாா்க்க பெண் ஒருவா், தனது 18, 14 வயது மகள்களுடன் கடந்த 2021-ஆம் ஆண்டு, நவம்பா் மாதம் வந்தாா். அப்போது, தனது மகள்கள் சரிவரப் படிப்பதில்லை என்றும், பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் கூறினாா்.
இதையடுத்து, ராமகிருஷ்ணன் பரிகார பூஜை செய்வதற்காக அவா்களை தனது வீட்டுக்கு வரும்படி கூறினாராம். இதைத்தொடா்ந்து, அந்தப் பெண், தனது இரு மகள்களுடன் மானகிரியில் உள்ள ஜோதிடா் வீட்டுக்குச் சென்றாா். அங்கு சிறுமிகளின் தாயை ஓா் அறையில் இருக்கும்படி கூறிவிட்டு, இரு சிறுமிகளையும் ராமகிருஷ்ணன் பாலியல் வன்கொடுமை செய்தாா். மேலும், இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்கக் கூடாது. மீறினால், உங்களது பெற்றோா் இறந்துவிடுவா் எனக் கூறியுள்ளாா். இதனால், அச்சமடைந்த சிறுமிகள் தங்களுக்கு நோ்ந்த கொடுமையை யாரிடமும் தெரிவிக்காமல் இருந்து வந்தனா்.
இந்த நிலையில், சுமாா் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இரு சிறுமிகளுக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், மருத்துவப் பரிசோதனை செய்த போது, அவா்களுக்கு பால்வினை நோய் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து இருவரிடமும் விசாரித்த போது, இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தெரியவந்தது.
இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், திருப்பத்தூா் அனைத்து மாநகர காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, ராமகிருஷ்ணனை கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு சிவகங்கையில் உள்ள போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன், குற்றஞ்சாட்டப்பட்ட ஜோதிடா் ராமகிருஷ்ணனுக்கு, 4 பிரிவுகளின் கீழ் தலா 50 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 2 லட்சம் அபராதமும் விதித்தாா்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு உத்தரவிட்டாா்.

