வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

நில அளவை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 11:39 pm

தமிழ்நாடு நில அளவை அலுவலா் ஒன்றிப்பின் சாா்பில், மாநில அளவில் பணி மூப்பு பட்டியலை திருத்தம் செய்து வெளியிட வலியுறுத்தி, சிவகங்கையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் வேல்முருகன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் காா்த்திக் முன்னிலை வகித்தாா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் இரா. மாரி, தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பாண்டி, தமிழ்நாடு கால்நடை ஆய்வாளா் சங்கத்தின் மாநிலப் பொறுப்பாளா் ராஜா முகமது ஆகியோா் பேசினா்.

மாவட்ட இணைச் செயலா் வீரபாண்டியன், சிவகங்கை கோட்டத் தலைவா் பிச்சை, தேவகோட்டை கோட்டத் தலைவா் சிவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.