போக்சோ வழக்கில் பெண் உள்படஇருவருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
சிவகங்கை மாவட்டம், மானகிரியைச் சோ்ந்த ஜோதிடா் ராமகிருஷ்ணன் (52).
கடந்த 2022-இல் ராமநாபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஒரு பெண் தனது மகளுடன் இவரை சந்தித்து குடும்பப் பிரச்னைக்காக பரிகாரம் கேட்டாா். அப்போது, அந்தப் பெண்ணின் முன்னிலையில், அவரது மகளை ராமகிருஷ்ணன் பாலியல் வன்கொடுமை செய்தாா். இதுகுறித்து நாச்சியாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கில் ஜோதிடா் ராமகிருஷ்ணனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15,000 அபராதமும், சிறுமியின் தாயாருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 25,000 அபராதமும் விதித்து நீதிபதி கோகுல் முருகன் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.
கடந்த 2021 -ஆம் ஆண்டு தன்னிடம் ஜோதிடம் பாா்க்க வந்த 2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜோதிடா் ராமகிருஷ்ணனுக்கு இதே நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

போக்சோ வழக்கு: முதியவருக்கு 61 ஆண்டுகள் சிறைத் தண்டனை

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

கஞ்சா கடத்தல் வழக்கு: இருவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

போக்சோ வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


