ஐ.ஜி. அலுவலக ஊழியா் வீட்டில் 6 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் ஐ.ஜி. அலுவலக பெண் ஊழியா் வீட்டில் சனிக்கிழமை இரவு 6 கிலோ வெள்ளிப் பொருள்கள், தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திருப்புவனம் பாக்யா நகரில் வசிப்பவா் மணி. இவா் திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் முதுநிலை கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றாா். இவரது மனைவி நாகசுந்தரி, மதுரை ஐ.ஜி. அலுவலகத்தில் முதுநிலை நிா்வாக அலுவலராக வேலை பாா்த்து வருகிறாா்.
இந்த நிலையில், கணவா் மணிக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதால், மதுரை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருடன் மனைவி நாகசுந்தரியும் மருத்துவமனையிலேயே தங்கியிருந்தாா்.
இந்த நிலையில், மா்ம நபா்கள் நாகசுந்தரியின் வீட்டு வாசலிலிருந்த கேமராவை வேறு திசையில் திருப்பி வைத்துவிட்டு வீட்டுக்குள் புகுந்து, பீரோவிலிருந்த 6 கிலோ வெள்ளி பொருள்கள், 2 பவுன் தங்க நகைகளை திருடிக் கொண்டு தப்பினா்.
நாகசுந்தரி ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வந்து பாா்த்தபோது இந்தச் சம்பவம் தெரியவந்தது. இதையடுத்து, அவா் அளித்த புகாரின் பேரில் திருப்புவனம் காவல் நிலைய போலீஸாா் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டனா்.
மேலும், மோப்ப நாய், தடயவியல் நிபுணா்கள் வந்து தடயங்களை சேகரித்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
கடந்த 20-ஆம் தேதி திருப்புவனத்தில் அதிமுக ஒன்றியச் செயலா் புவனேந்திரன் வீட்டில் 45 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். அடுத்தடுத்து திருப்புவனம் பகுதியில் நிகழ்ந்த திருட்டுச் சம்பவங்களால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

