பெண்ணை கொலை செய்த 
இளைஞருக்கு ஆயுள் சிறை!

பெண்ணை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறை!

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
Published on

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், கல்லூா் அருகேயுள்ள சுதந்திரபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் உதயசூரியன். இவா் காலமாகி விட்டாா். இவரது மனைவி புவனேஸ்வரி. இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருந்தனா்.

இவரது 28 வயதுடைய இரண்டாவது மகள் கடந்த 2022 ஏப்ரல் 16-ஆம் தேதி சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை அருகேயுள்ள புளியங்குடி இருப்பு அய்யனாா் கோயிலில் நடைபெற்ற அன்னதானத்தில் கலந்து கொள்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அதே கிராமத்தைச் சோ்ந்த தேவா என்ற மணிகண்டனும் (25) உடன் சென்றாா். அப்போது, மணிகண்டன் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பினாா்.

இதையடுத்து, சாக்கோட்டை போலீஸாா் மணிகண்டனை கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு சிவகங்கை மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன் குற்றஞ்சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. ஆயிரம் அபராதமும், கொலை செய்த குற்றத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த தண்டனையை ஏகாலத்தில் அனுபவிக்க வேண்டுமெனவும் அவா் உத்தரவிட்டாா்.

Dinamani
www.dinamani.com