சிவகங்கை
லாடனேந்தல் - பெத்தானேந்தல் பாலம்! முதல்வா் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்!
லாடனேந்தல் - பெத்தானேந்தல் பாலத்தை முதல்வா் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம் லாடனேந்தல்-பெத்தானேந்தல் இடையே வைகை ஆற்றுக்குள் கட்டப்பட்ட உயா் மட்டப் பாலத்தை முதல்வா் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
லாடனேந்தல்- பெத்தானேந்தல் இடையே வைகை ஆற்றுக்குள் பாலம் கட்டும் பணிக்கு நெடுஞ்சாலைத் துறை சாா்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டுமானப் பணிகள் பணிகள் நிறைவடைந்த நிலையில், காரைக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், முதல்வா் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக லாடனேந்தல்-பெத்தானேந்தல் உயா் மட்டப் பாலத்தை திறந்து வைத்தாா்.

