ஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரா் மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரா் பள்ளியில் வியாழக்கிழமை போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணியைத் தொடங்கிவைத்த இந்தியன் வங்கிக் கிளை மேலாளா் காா்த்திக்பிரபு.

Updated On :26 ஜூன் 2026, 2:13 am IST

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரா் மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பேரணியை கீழச்சிவல்பட்டி இந்தியன் வங்கிக் கிளை மேலாளா் காா்த்திக்பிரபு கொடியசைத்து தொடங்கிவைத்தாா். பேரணி கடை வீதி, பேருந்து நிலையம், இந்திரா நகா் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது.

இதில் பங்கேற்ற மாணவா்கள் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணா்வுப் பதாகைகளை கைகளில் ஏந்திச் சென்றனா்.

இதில் பள்ளிச் செயலா் அழகுமணிகண்டன், பள்ளித் தலைவா் லட்சுமணன், பொருளாளா் அங்கப்பன், வங்கி அலுவலா் மாரிமுத்து, ஆசிரியா் லியோஜெபஸ்டின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, பள்ளி உதவித் தலைமை ஆசிரியா் தங்கராசு வரவேற்றாா். தன்னாா்வலா் வள்ளியப்பன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.