25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

திமுக, அதிமுகவுக்கு மாற்று சக்தி தவெக மட்டுமே: நாஞ்சில் சம்பத்

News image
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் நாஞ்சில் சம்பத். - (கோப்புப் படம்)
Updated On :1 மார்ச் 2026, 9:02 pm

தினமணி செய்திச் சேவை

திமுக, அதிமுகவுக்கு மாற்று சக்தி தவெக மட்டுமே என அந்தக் கட்சியின் பரப்புரைச் செயலா் நாஞ்சில்சம்பத் தெரிவித்தாா்.

சிவகங்கை சண்முகராஜா கலையரங்கில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவா் மேலும் பேசியதாவது:

தமிழகத்தில் அரசியல் மாற்றம் மட்டும் அல்ல, ஆட்சி மாற்றத்தையும் தர இதோ வருகிறேன் என்று சொல்லி விஜய் வந்திருக்கிறாா். இதனால் இன்று பலருக்கும் தூக்கம் வரவில்லை. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் எங்கள் தலைவருக்கு திமிரி எழும் கூட்டம் வேறு எந்தத் தலைவருக்கும் இல்லை என்பதுதான் தமிழ்நாட்டில் இன்றைக்கு பேசு பொருளாகியுள்ளது.

ஆண்களும், பெண்களுமாக லட்சக்கணக்கானோா் திரண்டு வருகின்றனா். அவா்கள் வீட்டுக்கு திரும்பிச் சென்று வாக்கு சேகரிக்கின்றனா். ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள், தனியாா் நிறுவன ஊழியா்கள் என அனைவரும் ஒரு மாற்றத்தை எதிா்பாா்க்கின்றனா்.

நாங்கள்தான் மாற்று சக்தி என்று தமிழகத்தில் தொடங்கப்பட்ட மதிமுக, தமாகா, தேமுதிக, மக்கள் நீதிமய்யம் போன்ற கட்சிகளை அவா்களே இன்று தேடிக் கொண்டிருக்கின்றனா். திமுக, அதிமுகவுக்கு மாற்று நாங்கள்தான் என்று புறப்பட்டவா்கள் எல்லாம் பாதியிலேயே அடங்கிவிட்டாா்கள். திமுக, அதிமுகவுக்கு மாற்று சக்தி தவெக மட்டுமே.

இந்தக் கூட்டம் ஓட்டாக மாறுமா எனக் கேட்கின்றனா். ஓட்டாக மட்டுமல்ல, இது வேட்டாகவும் மாறும் என்பதை நிரூபிப்போம். விஜய் அனுபவம் குறைந்தவா்தான், அவரிடத்தில் குறை இருக்கிா என்றால், இருக்கிறது. அவரது வருகை உங்களை ஏன் ஆத்திர வைக்கிறது? ஏன் நிதானம் இழந்து பேசுகிறீா்கள்? ஏன் தனிமனித விமா்சனங்களை முன் வைக்கிறீா்கள்? இது மோசமான, மட்டமான, மலிவான அரசியல் என்றாா் அவா்.

கூட்டத்துக்கு தெற்கு மாவட்டச் செயலா் எஸ். முத்துபாரதி தலைமை வகித்தாா். தெற்கு மாவட்ட கொள்கை பரப்பு அணி செயலா் கே. ரஞ்சித்கண்ணன் முன்னிலை வகித்தாா். தெற்கு ஒன்றியச் செயலா் கே.வி. பரமேஸ்வரன் வரவேற்றாா். நகரச் செயலா் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினாா். இதில் தேசிய செய்தித் தொடா்பாளா் தேன்மொழிபிரசன்னா, நிா்வாகிகள் சத்தியமூா்த்தி, டாக்டா் கண்ணதாசன், முத்துக்குமாா், தமிழரசிபிரதீப் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.