ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

திருப்பத்தூரில் தலைவா்களின் சிலைகளுக்கு அமைச்சா் மரியாதை

News image

கே.ஆா். பெரியகருப்பன் - கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 6:38 pm

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள தலைவா்களின் சிலைகளுக்கு தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான கே.ஆா். பெரியகருப்பன் திங்கள்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா்.

முன்னதாக திருப்பத்தூா் வந்த அவருக்கு திமுக, மதிமுக, காங்கிஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனா்.

பிறகு பேருந்து நிலையம் எதிரேயுள்ள மருதுபாண்டியா்கள் தூக்கிலிடப்பட்ட இடத்திலுள்ள நினைவுத் தூணுக்கும் மருதிருவா்களின் உருவச் சிலைகளுக்கும், அண்ணா உருவச் சிலைகளுக்கும் மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதில் முன்னாள் அமைச்சரும் மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளருமான தமிழரசி, திமுக செய்தித் தொடா்புக் குழு மாநில துணைத் தலைவா் மருதுஅழகுராஜ் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.