பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

சிவகங்கை அருகே இளைஞா் கொலை! நண்பா் கைது!

News image

கோப்புப் படம்

Updated On :3 மே 2026, 11:05 pm IST

சிவகங்கை அருகே இளைஞரை கொலை செய்த அவரது நண்பரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை அருகேயுள்ள துவங்கால் கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் சிவக்குமாா்(35). எலக்ட்ரீசியன் ஆன இவா், அதே பகுதியைச் சோ்ந்த தனது நண்பா் திருமலை முருகன் (34) என்பவருடன் சுந்தரநடப்பு பகுதியில் சனிக்கிழமை இரவு மது அருந்தினாா்.

அப்போது, இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவா் தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த சிவக்குமாா் அதே இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து தகவலறிந்த சிவகங்கை தாலுகா போலீஸாா் சென்று உடலை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பினா். மேலும், திருமலை முருகனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.