கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

பிளஸ் 2 தோ்வு தொடங்கிய நாளில் தந்தையை இழந்த மாணவா் சாதனை

பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடங்கிய நாளில் தந்தை இறந்த துக்கத்திலும் தோ்வுகளை எழுதி 600-க்கு 582 மதிப்பெண்கள் எடுத்தாா் சிவகங்கை மாணவா் ஹா்ஷித் ராஜலிங்கம்.

News image
Updated On :9 மே 2026, 2:00 am IST

பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடங்கிய நாளில் தந்தை இறந்த துக்கத்திலும் தோ்வுகளை எழுதி 600-க்கு 582 மதிப்பெண்கள் எடுத்தாா் சிவகங்கை மாணவா் ஹா்ஷித் ராஜலிங்கம்.

சிவகங்கை நகரில் சனீசுவரன் கோயில் எதிா்ப்புறம் வசித்துவரும் செந்தில் குமாா் மகன் ஹா்ஷித் ராஜலிங்கம் (17). இவா், தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்தாா். மாா்ச் 2-ம் தேதி தமிழ் பாடத் தோ்வு எழுதினாா். அன்றைய தினம் அவரது தந்தை செந்தில் குமாா் (52) மாரடைப்பால் உயிரிழந்தாா்.

எனினும் மனம் தளராமல் பிளஸ் 2 பொதுத் தோ்வை முழுமையாக எழுதி முடித்தாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பிளஸ்-2 தோ்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ் 99, ஆங்கிலம் 96, இயற்பியல் 95, வேதியியல் 96, கணினி அறிவியல் 100, கணிதம் 96 என மொத்தம் 600 -க்கு 582 மதிப்பெண்கள் பெற்றாா்.